சீதைதான் பெண்ணே நீ !

சீதைதான் பெண்ணே நீ !

பனிக்கட்டி விழப்
பார்த்திருக்கிறேன்
ஆலங்கட்டி மழையில், 

உன் பார்வையிலுமா ?

அதெல்லாம் சரி,

விழுந்த இதயம்
ஏன இப்படிப்
பாஸ்பரஸ் கட்டியாய்ப்
பற்றி எரிகிறது. . .?

பற்றி எரிந்தும்
மனசுக்குள் அழியாது
பரிசுத்தமாய்
ஜ்வலிக்கிறதே நின் உரு. . .!

நிச்சயம் சீதைதான் பெண்ணே நீ !

Leave a Comment