இன்னா கவிஞரே,
தெய்வம் மேலே பாட்டு எளுதுறீங்கோ,
காதல் பாட்டு எளுதுறீங்கோ,
இலஞ்சம் ஊழல், மானுடம், சமூகம் பத்தி எல்லாம் சரி
எங்கள் கனவுக் தெய்வம்
நமீதா மேல எளுதாங்காட்டி
இன்னாக் கவிஞரையா நீர் ?
என்னடா இது சென்னை செந்தமிழ்
என்று எண்ணாதீர்,
இது பாடலுக்குத் தொகையறாவாக்கும் !
இறைவன் படைப்பில் பிரம்மாண்டங்கள் இரண்டு
எவை அவை மற்றும் அளவும், அதன் வயதும்
என்னவெனச் சொல்லுங்கள் பார்ப்போம்
நண்பனின் கேள்விக்கு
நான் ஆகாயம் பார்த்தேன்
EXPANDING UNIVERSEக்கு
எப்படிக் கணக்கிட ?
‘சரி, ஒரு பதில் ஆகாயம் காட்டிவிட்டாய்
பார் இன்னொரு பதிலை . . .!’
என
நண்பனோ விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பதுமைகளின்
எண்ணிக்கை [...]