அனிச்சமாய் விழுந்த்து அடி
—————————————–
வருக வருக கவிதைப் புத்தகமே
-என்று என்னை வரவேற்கிறாய். . .
அது சரி. . .
கல்லூரிப் புத்தகமாகப்
பிறக்கவில்லையே நான்
-எனப்
பொருமுகிறேன்
நீ நெஞ்சு இறுக்கி அணைத்திருக்கும்
பாடப் புத்தகம் பார்த்த படி. . .!
அப்படியா சேதி
- என
அதே புத்தகத்தால்
முதுகில். . .
போட்டாய் ஒரு போடு !
ஷ்ஷ் அம்மம்ம,
சகவாச தோஷமோ இப் புத்தகத்துக்கு . .?
தலைப்பைப் படியுங்களேன் மீண்டும் !
magudadheeban@gmail.com
மகுடதீபன் 9486102034